Saturday, March 5, 2016

இறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு

இறைச்சிக் கோழிகள் பொதுவாகவே விரைவில் வளரக் கூடியவையாக இருக்கும். உடல் வளர்ச்சியும் இனப்பெருக்கத் திறனும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக அமைந்திருக்கும். எனவே உடல் வளர்ச்சி அளவுக்கு மீறி மிகுந்துவிடாமல் சரியான அளவு உணவுக் கொடுக்கவேண்டும்.

இனவிருத்திக் கோழிகள் பராமரிப்பு

இக்கோழிகள் குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெருவாரியான முட்டைகளில் இருந்து நல்லக் குஞ்சுகளைப் பெறவேண்டுமெனில் முறையான பராமரிப்பு அவசியம். இனச்சேர்க்கைக்கென தனியாக சேவல்கள் வளர்க்கப்படவேண்டும். இவ்வாறு இனச்சேர்க்கை சேவல்களை எடைக் குறைந்த இனங்களுக்கு சேவல்,பெட்டைக் கோழிகள் விகிதம் 1:10 என்றும் எடை மிகுந்த இனங்களுக்கு 1:8 என்றும் இருக்குமாறு 20வது வாரத்தில் விடவேண்டும். 24வது வாரத்திலிருந்து முட்டைகளை சேகரித்துக் கொள்ளலாம். புல்லோரம் கழிச்சல் நோய் மற்றும் மைக்கோபிளாஸ்மாசிஸ் போன்ற நோய்கள் தாக்காமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
கோழிகளின் ஆரோக்கியத்திற்கும், அதிகமாகக் பொரிக்கும் திறனுக்கும் நன்கு சுத்தமான உலர்ந்த கூளங்களைப் பயன்படுத்துதல் அவசியம். அடைக்காக்க வைக்கப்படும் முட்டைகள் புதிதாக இடப்பட்டவையாகவும், ஓடுகள் தரமாகவும் (கெட்டியாகவும்) இருக்கவேண்டும். 5 கோழிகளுக்கு ஒரு கூடு என்ற அளவில் கூடுகள் தேவைப்படும்.

கூண்டு முறைப் பராமரிப்பு

Layer management
இம்முறையில் கோழிகளைக் கையாள்வது எளிது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கலாம். முட்டைச் சேகரிப்பு எளிது, ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்த்தொல்லை குறைவு. பயனற்ற கோழிகளைக் கண்டு நீக்குவது எளிது போன்ற பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. எனினும் ஆரம்ப முதலீடு அதிகம், ஈரக்கழிவுகள், துர்நாற்றம், கொசு, ஈ போன்ற குறைபாடுகளும் உள்ளன. இவற்றில் சில பிரச்சனைகளுக்கு உயர்த்தப்பட்ட கூண்டு முறை சிறந்தது. 4 கோழிக் கூண்டு வீடுகள் பண்ணைக்குப் போதுமானது. நான்கு கூண்டு முறையின் அளவுகள் முறையே.
நீளம்                                   45 செ.மீ (முன்பக்கம்)
உயரம் (பின்பகுதியில்)        38 செ.மீ
உயரம் முன்பகுதியில்          42 செ.மீ
அகலம்                                42 செ.மீ
எனினும் உயரத்தை அளவிட 2 முறைகள் உள்ளன. கூண்டின் தரை முன்பகுதி நோக்கி சரிந்து இருக்கும். பொதுவாக முட்டையிடும் கோழிகளுக்கான தரையமைப்பு இணைக்கப்பட்ட கம்பி வலையாக இருக்கும். சில இடங்களில் இக்கம்பிகள் பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டிருக்கும். தரைக் கம்பி 14 கஜமுள்ள கம்பிகளாக இருப்பது சிறந்தது. வலைச்சல்லடை அளவு 2.5×5.0 செ.மீ (1 x2”) கூண்டின் முன்பக்கம் கூண்டையும் தாண்டி வலையமைப்பு சிறிது நீண்டிருக்கும். இதன் வழியே முட்டைகளை எளிதில் சேகரித்துக் கொள்ளலாம். இந்து நீண்ட அமைப்பு 18 செ.மீ தூரம் சற்று வளைந்து காணப்படும். குறைந்த அளவு இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க ஏதுவாக ஒரு அடுக்கு, இரண்டு மற்றும் 3 அடுக்கு வரை அமைத்துக் கொள்ளலாம்.
கூண்டானது தரையிலிருந்து 1 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். எச்சங்களைச் சேகரிக்கக் கூண்டின் அளவிற்கேற்ப தரையில் 30 செ.மீ ஆழத்திற்கு குழி அமைத்தல் சிறந்தது.
நீளமான, தொடர்ச்சியான தீவனத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீரானது நீளவாக்கில் அமைக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ச்சியாக வழங்கப்படவேண்டும். தீவனத் தொட்டிக்கு மேலே கூண்டிற்கு வெளிப்புறப் பகுதியில் நீர்க்குழாய்கள் செல்லுமாறு வைத்தல் வேண்டும். ஆங்காங்கு கீழே வரும் குழாய்களில் துளையிட்டு அடைப்புடன் நீர்த் தேவையான அளவு சொட்டுசொட்டாக வரும்படி வைத்தல் வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும்.

வீடு / கொட்டகை அமைப்பு

18 வார வயதில் சரியாக வளர்ச்சியடையாத பெட்டைக் குஞ்சுகளைப் பிரித்து நீக்கிவிடவேண்டும். கொட்டகைப்படுத்தும் சமயத்தில் சரியாகப் பிரித்து விடுதல் நல்லது. பிரிக்கப்பட்ட கோழிகளை தனி அமைப்பில் வளர்த்துப் பின் முட்டையிடும் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது அங்கேயே வளர்க்கலாம். சரியான அளவு இடவசதியுடன் அதிக இடம் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது முட்டையிடும் கோழி ஒன்றிற்கு 65 அடி இடம் அளிக்கப்படவேண்டும். முட்டையிடுவதற்கு 2 வாரம் முன்பு கூடுகள் அல்லது வலைப்பின்னல் அமைக்கப்படவேண்டும். அப்போது தான் கோழிகள் புதிய அமைப்பிற்கு பழகிக் கொள்ள ஏதுவாகும்.
Layer
முட்டையிடும் கோழி
பட்டைத் தீட்டிய அரிசி 13
கோதுமைத் தவிடு 4
மீன் துகள் / உலர்த்தியது 6
உப்பற்ற மீன் 6
டை கால்சியம் பாஸ்பேட் 1
உப்பு 0.25
தாதுக் கலவை 1.75
ஓடுத்துகள் 5
மொத்தம் 100.00
தீவனத்தை நீளமான தீவனப் பெட்டியிலோ அல்லது தொங்கும் அமைப்புள்ள தீவனப்பெட்டிகள் அமைத்தோ கொடுக்கலாம். 50 செ.மீ விட்டமும் 20-25 கிலோ எடைக் கொள்ளளவுக் கொண்ட தொங்கும் வகையில் அமைந்த தீவனப்பெட்டி 100 குஞ்சுகளுக்கு போதுமானது. நீர்த் தொட்டியிலிருந்து 3 மீட்டர் தொலைவில் தீவனப்பெட்டிகள் இருக்குமாறு அமைக்கவும். தீவனத்தை அவ்வப்போது நன்கு கலக்கிவிடவேண்டும்.
நீரானது 2.5 செ.மீ குறைந்த இடைவெளியில் வைக்கப்படவேண்டும். வெப்பநிலை அளவு 27 டிகிரி செல்சியஸிற்கு மேல் செல்லும் போது நீர்த்தொட்டிகளை அதிகப்படுத்தவேண்டும். தீவனத் தொட்டிகளின் மேல் முனை (நுனி) யானது கோழிகளின் பின்பாத்தியை விட சற்று உயரே இருக்குமாறு அமைக்கவேண்டும். தொட்டியின் 3ல் ஒரு பங்கு மட்டுமே தீவனம் நிரப்பவேண்டும்.

முட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்

முட்டையிடும் கோழிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அரைக்கப்பட்ட தானியங்களை உணவாகக் கொடுக்கவேண்டும். தீவனங்கள் அளவு (சதவிகிதம்) மஞ்சள் சோளம் 47 சோயாபீன் துகள் 12 எள்ளுப் புண்ணாக்கு 4 கடலைப் புண்ணாக்கு 6

தீவனக் கூட்டுப் பொருட்கள்

பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவைகளையும் தீனியாகக் கொடுக்கலாம். மேலும் விலங்கு, காய்கறிப் புரதங்களான மீன் தோல்க்கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித்தீவனமாகப்  பயன்படுத்தலாம். இதோடு தாதுக்களும் விட்டமின்களும் கலந்து சரிவிகித உணவாகக் கொடுத்தல் வேண்டும்.
கீழ்க்காணும் தீவனப் பொருட்கள் நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
1.சோளம்
இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரித்தல் எளிதாகிறது. குறைந்தளவு புரதமும், அதிக ஆற்றலும் கொண்டது. லைசின், சல்ஃபர் அமினோ அமிலங்களைப் பெற்றுள்ளது. மஞ்சள் நிறச் சோளத்தில் விட்டமின் மற்றும் சோன்த்தோடஃபில்  நிறமி நிறைந்துள்ளது. இந்த நிறமிகள் தான் சிலவகைப் பறவைகளின் மஞ்சள் தோலிற்குக் காரணம்.

2.பார்லே

இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் 15 சதவிகிதத்திற்கு மேல் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

3.ஓட்ஸ்

ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகமிருப்பதால் 20 சதவிகிதம அளவே சேர்க்கவேண்டும். இதில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால் கோழிகளில் வரும், கால் பிரச்சினை, இறகை பிடுங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னின ஊன் ஊன்றுதல் போன்ற குறைபாடுகளைக் குறைக்க முடியும்.

4.கோதுமை

சோளத்திற்குப் பதில் அதிக ஆற்றல் அளிக்க கோதுமை பயன்படுகிறது.

5.கோதுமை தவிடு

இது மாங்கனீஸ் பாஸ்பரசுடன் சிறிது நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

6.கம்பு

கோதுமை போலவே நல்ல ஆற்றல் வழங்கியாக இது செயல்படுகிறது.
7.அரிசி
உடைந்த அரிசி குருணைகள் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரரேட் மிகுந்துள்ளது.

8. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி

இது ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகையால் 50 சதவிகிதம் வரை தீவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் சிறிது எண்ணெய்ச் சத்தும் உள்ளது. சரியாக பராமரிக்கப்படவில்லை எனில் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும்.

9.எண்ணெய் நீக்கப்பட்ட பாலிஸ் அரிசி

எண்ணெய் நீக்கப்பட்டதால் இதில் கொழுப்புச் சத்துக் குறைவே. எனினும் சாம்பல் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

10. வெள்ளைச் சோளம்

இது மஞ்சள் சோளம் போன்றே ஊட்டச்சத்துக்களைப் பெற்று இருந்தாலும் அதை விட வெள்ளைச் சோளத்தல் புரதம் அதிகம். கோழிகள் விரும்பி உட்கொள்ளும். மேலும் இதில் சில அமினோ அமிலங்கள் புண்ணாக்கில் இருப்பதைக் காட்டில் அதிக அளவில் உள்ளன.

11.கடலைப்புண்ணாக்கு

இதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. 40 சதவிகிதம் வரை தீவனக் கலவையில் பயன்படுத்தலாம்.

12.மீன் தூள்

இது ஒரு சிறந்த கோழித்தீவனம். இதில் விலங்குப் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்பு மீனா அல்லது கலனில் அடைத்த மீனா என்பதைப் பொறுத்து பயன்படுத்தும் அளவு வேறுபடும். இந்திய மீன் துகள்களில் 45-55 சதவிகிதம் புரதம் உள்ளது. மீனில் செதில்கள் இருந்தால் தீவனத்தரம் குறையலாம். எனவே செதில்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

13.சுண்ணாம்புக்கல்

இது சுண்ணாம்புச் சத்து அதாவது கால்சியம் மிகுந்தது. எனினும் 5 சதவிகிதம் மேல் சேர்க்கக்கூடாது.

14.கடற்சிப்பி ஓடு

இதில் 38 சதவிகிதம் வரை கால்சியம் இருப்பதுடன் சுவை மிகுந்தது. சுண்ணாம்பிற்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது.

விட்டமின்கள்


விட்டமின் ஏ, விட்டமின் டி3, விட்டமின் ஈ, பைரிடாக்ஸின், ரிபோஃபிளேவின், பேன்டாதொனிக் அமிலம், நியாசின்ஃபோலிக் அமிலம் கோலைன்.மேற்கண்ட ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கொடுக்க வேண்டும். சரிவிகித உணவே சிறந்த வளர்ச்சிக்கும் அதிக உற்பத்திக்கும் வித்தாகும்.

கோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்

அர்ஜினைன், கிளைசின், ஹிஸ்டிடின், லியூசின், ஐசோலியூசின், லைசின், மெத்தியோனைன், சிஸ்டைன், ஃபினைல் அலனின், த்ரியோனைன், டிரைப்டோபன் மற்றும் வெலைன் இவற்றில் மிக முக்கியமாகத் தேவைப்படுபவை அர்ஜினைன், லைசின் மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் டிரிப்டோபன்.
விட்டமின்களும், தாது உப்புக்களும் ஆற்றலை அளிக்கவில்லை எனினும் உடல் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தேவையான முக்கிய தாதுக்கள்
கால்சியம்,  பாஸ்பரஸ், சோடியம், தாமிரம், ஐயோடின், இரும்பு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம்.

தீவனப் பராமரிப்பு

தீவனப் பராமரிப்பு கோழி வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி வளர்ப்புச் செலவின் 60-70 சதவிகிதம் அளவு தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் தீன வீணாகாமல் முழுமையாக கோழிகளால் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரு லாபகரமான பண்ணையை உருவாக்க முடியும். 40க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கோழிகளுக்கு தேவைப்படுகிறது.
இவை கீழ்க்கண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களே ஆற்றலுக்கு பிரதானமானவை. கொழுப்பில் கார்போஹைட்ரேட் விட 2.25 மடங்கு ஆற்றல் அதிகமாக உள்ளது. மேலும் இதில் லினோலெயிக், லினோலெனிக், அராக்கிடியோனிக் அமிலம் போன்ற இன்றியமையாத கொழுப்பு அமிலங்களும் உள்ளன. அமினோ அமிலத் தேவையினைப் பூர்த்தி செய்யப் புரதம் அவசியம் ஆகும்.

விலங்குப் புரதங்கள்

1.இரத்தத் துகள்
இதில் 80 சதம் புரதமும், லைசின், அர்ஜினைன், மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் லியூசின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஐசோலியூசின் மட்டுமே இருப்பதில்லை. இதன் சுவைக் குறைவாக இருக்கும். 2-3 சதவீதம் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

2.கல்லீரல் கழிவுத் துகள்

லைசின், மெத்தியோனைன், சிஸ்டைன், டிரைப்டோபன் மற்றும் அதிக அளவு ரிபோஃபிளேவின், கோலைன் மற்றும் விட்டமின் பி12.

3.பட்டுப்பூச்சியின் கூட்டுப்புழுக் கழிவு

எண்ணெய் நீக்கப்பட்ட கூட்டுப்புழுவின் கழிவில் புரதம் மிகுந்துள்ளது. அதிக நார்ச்சத்து உள்ளதாலும் இதன் புரதம் செரிப்பதற்குக் கடினமாக இருப்பதாலும் இதன் பயன்பாடு கோழித்தீவனத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

4.அடைகாப்பகத்தின் கழிவுகள்

குஞ்சு பொரிக்காத முட்டைகள், கொல்லப்பட்ட குஞ்சுகள், இறந்த சினைக்குஞ்சுகள், இளம் கருக்கள் போன்றவற்றைச் சேகரித்து வேக வைத்து, அரைத்து கொழுப்பு நீக்கியோ அல்லது நீக்காமலோ கோழிகளுக்கு அளிக்கலாம். பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்து 25-34 சதவிகிதம் பண்படா புரதத்தைப் பெற்றிருக்கும்.

5.இறகுத் துகள்கள்

80-85 சதவிகிதம் புரதம் அடங்கியுள்ளதால் இதைத் தீவனத்தில் 5 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

6.கோழிப்பண்ணைக் கழிவுகள்

கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளின் 15 சதவிகிதம சாம்பல் சத்து இருக்கும். இதில் புரதம் 55-60 சதமும் கொழுப்பு 12 சதமும் இருக்கும்.

7.இறைச்சி மற்றும் எலும்புத் துகள்

இதில் அதிகப் புரதம் மட்டுமன்றி கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் அதிகம் அடங்கியுள்ளன. துகள்களில் அடங்கியுள்ள ஜெலாட்டின் அளவைப் பொறுத்து அதன் ஊட்டச்சத்துக் கலவை மாறுபடும். 5-10 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம்.

காய்கறிப் புரதங்கள்

1.கடுகுப் புண்ணாக்கு
இரு கடலைப் புண்ணாக்கைக் காட்டிலும் புரதம் மற்றும் லைசின் அளவு மிகுந்துள்ளது. எனினும் கிளைக்கோசைட்ஸ் மற்றும் காய்ட்டிரோஜன் உள்ளதால் இதைப் பதப்படுத்தினாலும் 5 சதவிகிதம் பயன்படுத்தக்கூடாது.
2.சோயாபீன் தூள்
சோயாபீனில் 35-40 சதவிகிதம் புரதமும், 18-21 சதவிகிதம் கொழுப்பும் உள்ளது. எண்ணெய் எடுக்க பல முறைகள் உள்ளன. சோயாபீன் எண்ணெய் பிழிந்து எடுக்கும் போது கிடைக்கும் தூளில் 42 சதவிகிதம் புரதமும் 5 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. சரியான சூடுபடுத்தும் முறை மூலம் இதன் புரதத்தன்மையை உயர்த்தலாம். சோயாபீனானது உயர் இரக புரதத்தைக் கொண்டுள்ளது. இதிலிருந்து லைசின் அர்ஜினைன், கிளைசின், டிரைப்டோபன், சிஸ்டைன் போன்ற அமினோ அமிலங்களைப் பெறலாம்.

3.எள்துகள்

இதில் அர்ஜினைன், மெத்தியோனைன் மற்றும் டிரைப்டோபன் போன்ற அமினோ அமிலங்களும் புரதமும் அதிக அளவில் உள்ளது.

4.கொத்தவரை

கொத்தவரையிலிருந்து தாவரக் கோந்து தயாரிக்கும் போது கிடைக்கும் உபபொருளில் புரோட்டீன் மிகுதியாக உள்ளது. இதில் டிரிப்சின் தடுப்பான் இருப்பதால் சிறிதளவே பயன்படுத்தவேண்டும்.

5.சூரியகாந்தி விதைத் தூள்

நிலக்கடரைத் தூளை விட இதில் ஊட்டச்த்துக்கள் அதிகம். எனினும் இதன் அதிக நார்ச்சத்தால் இது கோழித்தீவனத்தில் சேர்க்கப்படுவதில்லை. சோயாபீனை விட இதில் மெத்தியோனைன் மற்றும் அர்ஜினைன் அதிகமுள்ளது. லைசின் மிகக் குறைவு. மேலும் இது பாண்டதொனிக் அமிலம் மற்றும் நியாசினுக்குச் சிறந்த ஆதாரம்.

6.செந்தூரகத்தூள்

இதுவும் நிலக்கடலைத் தூளுக்குப் பதிலாக 25 சதவிகிதம் வரை பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகமாகப் பயன்படுத்தினால்  லைசின் பற்றாக்குறை ஏற்படும்.

7.ராம்டில் புண்ணாக்கு

கோழிக்குஞ்சுகளுக்கும், முட்டைக் கோழிகளுக்கும் தீவனமாக 50-100 சதவிகிதம் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன.

8.பருத்திப் புண்ணாக்கு

புரதம் அதிக அளவில் இருந்தாலும் லைசின் அளவு குறைவாகவே இருக்கும். 15 சதவிகிதம் வரை இப்புண்ணாக்கைப் பயன்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தினால் முட்டையின் மஞ்சள் கருவில் சிறு கட்டி போன்று தோன்றும்.

9.சோளம் குளூட்டன் துகள்கள்

சோள மாவுத் தொழிற்சாலையின் உபபொருளான இதில் புரோட்டீன், சாந்தோஃபில் நிறைந்துள்ளது.

10.பெனிசிலியம்-மைசிலியம் கழிவுகள்

இது பென்சிலின் தயாரிப்பில் வெளிவரும் கழிவு ஆகும். இதில் புரதம் மற்றும் எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளதால் 5  சதம் வரை கலப்புத்  தீவனத்தில் பயன்படுத்தலாம்.

11.ஆளிவிதைத் துகள்கள்

இதில் டிரைப்டோபன் நிறைந்துள்ளது எனினும் சையனோஜெனிக் கிளைக்கோஸைடு மற்றும் ஏன்டிபைரிடாக்ஸியல் காரணிகள் நிறைந்துள்ளதால் 5 சதவிகிதம் மேல் உபயோகிக்கக்கூடாது. இதை வேக வைத்துக் கொடுப்பதால் விஷத்தன்மை குறையும்.

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை

1.எண்ணெய் நீக்கப்பட்ட சால்விதைத்தூள்
சால் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கும் போது கிடைக்கும் உபபொருட்களே இத்தூள்கள். இவை பார்ப்பதற்கு தானியங்களைப் போல் இருக்கும். இதில் டேனின் அதிகம் இருப்பதால் குறைந்தளவே தீவனத்தில் பயன்படுத்தவேண்டும்.

2.மரவள்ளித்தூள்

இது மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்படுகிறது. இதில் ஆற்றல் அதிகம். சில இரகங்களில் சைனோஜென்க் என்னும் பொருட்கள் உள்ளன. கிழங்கை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி, கூடு செய்வதன் மூலம் இதைப் போக்கலாம்.

3.உலர்த்திய கோழிக்கழிவுகள்

கலப்படமற்ற கூண்டு முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் கழிவுகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் 10-12சதவிகிதம் தூய புரதம் உள்ளது. இது சரியாகச் சுத்தம் செய்யப்பட்டால் தீவனக் கலவையில் 10 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

4.கரும்புச்சக்கை

தானிய வகைகளுக்குப் பதில் இவை 45 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். இதில் தாதுக்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவு கொடுத்தால் கழிவுகள் நீராக வெளியேற வாய்ப்புள்ளது.

5.சிறுதானியங்கள்

சாமை,பனிவரகு போன்ற சிறுதானியங்கள் மஞ்சள் சோளத்திற்குப் பதில் 20 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். ராகி,கம்பு, சோளம் போன்றவையும் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது.

அடைகாப்பு வெப்பநிலை

அடைக்காப்பானில் வெப்பநிலை சரியாக இருக்க சூடுபடுத்துதல் வேண்டும். மிக அதிக அல்லது மிகக்குறைந்த வெப்பநிலை குஞ்சுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் அடைகாக்கும் முதல் வாரத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் (35 டி செ) இருக்கவேண்டும். பின்னர் இது வாரத்திற்கு 5 டிகிரி ஃபாரன்ஹீட் குறைக்கப்பட்டு 70 டிகிரி ஃபாரன்ஹீட் வரை கொண்டு வரப்படுகிறது. குஞ்சு பொரிக்கும் நிலையில் அடைக்காப்பான் 24 மணிநேரமாகும்.
poultry_brooder
அடைகாப்பு
தம்ப் விதியின் படி அடைகாப்பானின் வெப்பநிலை 20 டிகிரி செ ஆக இருக்கவேண்டும். ஒரு வெப்பநிலைமாயி அடை (-6.7 டி செ) காப்பானில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் குஞ்சுகளின் செயல்களைக் கொண்டும் வெப்பநிலை சரியானதாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தால் குஞ்சுகள் அனைத்தும் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு சூடாக்கி (விளக்கு) யின் கீழ் வந்து நிற்கும். வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால் அவை சூடாக்கியின் அருகில் வராமல் விலகியே இருக்கும். இவ்வாறின்றி குஞ்சகள் சமமாக எல்லா இடத்திலும் பரவிக் காணப்பட்டால் வெப்பநிலை குஞ்சுகளுக்கு ஏற்ற அளவு உள்ளது என்று கணிக்கலாம். வெப்பக் காலங்களில் 3 வாரங்களுக்கு மேல் உள்ள குஞ்சுகளுக்கு சூடாக்கிகள் தேவைப்படுவதில்லை. செயற்கையாக வெப்பநிலையை அளிக்கப் பல சூடாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. வட்ட வடிவ முன்னும் பின்னும் நகரக் கூடிய மின்சார அடைக்காப்பான்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனும் வெப்பநிலையானது தானாகவே சரி செய்து கொள்ளப்படுகிறது. மின்சார விளக்குகளையும் சூடாக்கியாகக் பயன்படுத்தலாம். ஆனால இம்முறையில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது கடினம். அகச்சிவப்பு விளக்குகளும் பயன்படுத்தலாம். அடைக்காக்கும் வீட்டிற்கு தேவையான வெப்பநிலைக்கேற்ப அகச்சிவப்பு விளக்குகளின் உயரத்தையும் எண்ணிக்கையையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

கூளங்கள்

மரத்தூள், நெல் உமி போன்ற கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி 5 செ.மீ அளவிற்குக் கூளங்களை உருவாக்கவேண்டும். பூஞ்சாண் எளிதில் வளரும் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. கூளங்கள் கட்டி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவேண்டும். அம்மோனியா வாயு உருவாகாமல் தடுக்க ஈரமடைந்த கூளங்களை உடனுக்குடன் அகற்றிப் புதிய கூளங்களை அவ்விடத்தில் போடவேண்டும்.

சுகாதாரம்

கொட்டகையிலிருந்து அகற்றக்கூடிய தீவன, நீர்த்தொட்டிகள், கருவிகள், கூளங்கள் போன்றவைகளை நீக்கிவிட்டு ஒரு நல்ல கிருமி நாசினியைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி கொட்டகையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டுண்ணி மற்றும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கவேண்டும். பழைய கூளங்களை நீக்கிவிட்டபின் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தேவைப்படின் சிறிய அளவில் பூச்சிக்கொல்லியைப் புதிய கூளங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். மாலத்தியான் போன்ற மருந்தை தெளித்தோ, தூவிவிடுவதன் மூலமோ பேன், உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

அடைக்காக்கும் வீடு

அடைக்காக்கும் இடம் அதிகத்தூசுகள் இன்றி, மழை மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து குஞ்சுகளுக்குப் பாதுகாப்புத்  தருமாறு இருக்கவேண்டும். அடைகாப்புக் கொட்டிலில் கம்பி வலை பொருத்தப்பட்ட ஜன்னல்கள் அமைப்பது நல்ல காற்றோட்டத்திற்கு உதவும். அதிகத் தூசுகள் குஞ்சுகளுக்கு தூசுகளற்ற மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுத்தும். அதே போல் அதிக ஈரப்பதமும், கண் மற்றும் மூக்குக்குழலை பாதிக்கும் அம்மோனியா வாயு உற்பத்திக்கு வழி வகுக்கும். எனவே நல்ல தூசுகளற்ற காற்றோட்டத்துடன் கூடிய கொட்டகையை அடைகாக்கும் இடமாகப் பயன்படுத்தவேண்டும்.

கோழிப்பண்ணை மேலாண்மை


கோழிப்பண்ணை மேலாண்மை என்பது நல்ல உற்பத்தியைப் பெறக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிக் கூறுவதாகும். உற்பத்தித் திறனை அதிகரிக்க நல்லப் பராமரிப்பு முறைகளைக் குறைந்த செலவில் செய்தல் வேண்டும். இதுவே அறிவியல் பூர்வமான கோழிப்பண்ணை மேலாண்மையாகும்.

நோய்க்கட்டுப்பாடு

பரிந்துரைக்கப்பட்ட அட்டவணைப்படி தடுப்பூசிகளும், குடற்புழுநீக்க மருந்துகளும் அளிக்கவேண்டும்.

நீர் மற்றும் தீவனம்

தீவனத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையிலும், தரையிலிருந்து சற்று உயரத்திலும் வைக்கவேண்டும். வளரும் குஞ்சுகளுக்கான தீவனத் தொட்டி 10 செ.மீ உயரத்தில் வைக்கவேண்டும். குழாய் முறையில் அளிப்பதாக இருந்தால் 25 கிலோ  எடையுள்ள 50 குஞ்சுகளுக்கு ஒரு குழாய் என்ற அளவில் வழங்கலாம். தண்ணீர் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்கவேண்டும். 2.25 செ.மீ ஒரு குஞ்சுக்கு என்ற வீதத்தில் நீர் அளிக்கவேண்டும்.
poultry chicks feeding
நீர் மற்றும் தீவனம்

வளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை


வயது (வாரங்களில்) உணவுத் தேவை (கிராம் / கோழி / நாள்) 10 53.0 11 58.0 12 60 13 60 14 60 15 62 16 62 17 65 18 70 19 75 20 75

வளரும் குஞ்சுகள் பராமரிப்பு

6 வார வயதிற்குப் பின் செயற்கை வெப்பமும் வெப்பக்கூடுகளையும் நீக்கி விடலாம். பயன்படாத குஞ்சுகளை நீக்கி விடவேண்டும். ஒரு குஞ்சுக்கு 0.095-0.19 மீ 2 என்ற அளவு இடவசதி இருக்கவேண்டும். 8 வார வயதில் இருந்து வளரும் கோழிகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கவேண்டும். கலப்புத் தீவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய (பொருட்கள்) தீவனங்களாவன.
தீவனப் பொருட்கள் அளவு (சதவிகிதம்)
மஞ்சள் சோளம் 43
கடலைப்புண்ணாக்கு 8
எள்ளுப் புண்ணாக்கு 5
மீன் துகள் உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன் 6
அரிசி (பாலிஸ் செய்யப்பட்டது) 16
கோதுமைத் தவிடு 20
உப்பு 0.25
தாதுக் கலவை 1.75
மொத்தம் 100.00

புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு

  • குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
  • குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
  • கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
  • எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
  • வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
  • ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
  • குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
  • குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
  • சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
  • சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
  • குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
  • ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில்  ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
  • குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
  • கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
  • மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
  • ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.
poultry_chicks
புதிதாக பொரிக்கப்பட்ட குஞ்சுகள்

நம்நாட்டு இனங்கள்

சாதாரணமாக கிராமங்களில் வளர்க்கப்படும் தேசிய இனக் கோழிகள் நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. நம் நாட்டில் காணப்படும் சில  வகைக் கோழிகள் லெகார்ன், சஸக்ஸ், பிளைமாத் ராக் இனங்களைப் போன்று தோன்றினாலும் இவை அளவிலும் முட்டை உற்பத்தியிலும் சற்றுக் குறைந்தவை. நம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
இந்தியாவில் வரையறுக்கப்படாத சில இனங்கள் உள்ளன. இவைக் குறைந்த உற்பத்தித் திறனே பெற்றுள்ளன. உள்ளூர் இனங்களான டெனிஸ், காஷ்மீர், ஃபேடரெல்லா, டில்ரி, பர்ஸா, டெல்லிச்சேரி, டான்கி, நிக்கோரை, காலஹஸ்தி போன்ற சில தூய இனங்களே உள்ளன., பல வகை  கலப்பு இனங்கள் வளரும் இடங்களுக்குத் தகுந்தவாறு பல நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றில் அசீல், சிட்டாகாங், லாங்ஸான், பிரம்மா இரத்தம் போன்றவை நல்ல உற்பத்தியுள்ள வளாக்கக்கூடிய இனங்களாகும்.

கோழிக்குஞ்சு இனங்கள்

கோழிக்குஞ்சுகளும் கோழிகள் போல இறைச்சி மற்றும் முட்டைத் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கென வளர்க்கப்படும் இனங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, அதனிடமிருந்து பெறப்படும் முட்டைகள் அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் பெறப் பயன்படுகின்றன. இறைச்சிக் கோழிகள் வறுக்க, பொரிக்கப் பயன்படுபவை என பல வைககள் உள்ளன. இவ்வகைக் கோழிகள் விரைவில் வளரக்கூடிய இனங்களான செயற்கையான வெள்ளை ஆண் இனங்கள், செயற்கை வெள்ளை பெய் இனங்கள் நிறமுடைய வெள்ளை இனங்கள்.

கோழி இனங்களின் வகைப்பாடு

1.அமெரிக்க இனங்கள்
எ.கா புதிய ஹேம்ப்ளையர், வெள்ளை விளை மொத்ராக், சிவப்பு ரோட்ஜலேன், வையான்டேட் II
2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள்
இந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி  செய்யக்கூடியவை.

3.ஆங்கில இனங்கள்

இவ்வினங்களில் சதைப்பற்று அதிகம்
எ.கா ஆஸ்டிராலார்ட், கார்னிஸ், சுஸெக்ஸ்

4. ஆசிய இனங்கள்

பெரிய உடலுடன் வலிமையான எலும்புகளையும் அதிக சிறகுகளையும் பெற்றிருக்கும். முட்டையிலும் திறன் குறைவு.

5. இந்திய இனங்கள்

எ.கா ஆசில் (சண்டைக்கோழிகள்) சிட்லகாங், கடக்னாத்பர்ஸா

வியாபார இறைச்சிக் கேரழி இனங்கள்

காப், ஹப்பர்டு, லோமேன், அனக் 2000, ஏவியன் 34, ஸ்டார்பிரா, சேம்ராட்.

முட்டையிட ஏற்ற இனங்கள்

எ.கா பிவி 300, போவான்ஸ், ஹைலின், ஹச் மற்றும் என் நிக், டீகால் லொஹ்மேன்.

இறைச்சிக் கோழி

இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை. ஆண், பெண் என இரு வகைக் கோழிகளும் 6-8 வார வயது வரை வளர்க்கப்பட்டு இறைச்சிக்ாக அனுப்பப்படுகின்றன.

வளரும் பருவக் கோழிகள்

முட்டை உற்பத்திக்காக வளர்க்கப்படும் 9-20 வார வயது கொண்ட கோழிகள் வளரும் பருவக் கோழிகள் ஆகும்.

முட்டையிடும் கோழிகள்

முட்டை உற்பத்தி செய்யும் 21லிருந்து 72 வார வயது வரை உள்ளக் கோழிகள் முட்டையிடும் கோழிகள் எனப்படும்.

இறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்

  • முட்டைக்கோழி வளர்ப்பைவிட இறைச்சிக் கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு.
  • வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள் மட்டுமே.
  • அதிக அளவுக்  கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும்.
  • இறைச்சிக் கோழிகளில் தீவனத்தை நல்ல இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம்.
  • குறைந்த முதலீட்டில் விரைவில் அதிக இலாபம்.
  • ஆட்டு இறைச்சியைக் காட்டிலும் கோழி இறைச்சி விலை மலிவாக இருப்பதால் அதன் தேவை அதிகமாக உள்ளது.

கோழி இனங்கள்

கடந்த இருபதாண்டுகளில் இந்தியா இறைச்சிக் கோழி உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. உயர் இரக கோழிக்குஞ்சுகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன. வருடத்திற்கு 41.06 பில்லியன் முட்டைகளும் 1000 மில்லியன் இறைச்சிக் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்தியா முட்டை உற்பத்தியியல் 4வது இடமும் இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5வது இடமும் வகிக்கின்றது. தற்போது இறைச்சிக்கோழி உற்பத்தி ஆண்டு வளர்ச்சியில் 15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனவே கோழி வளர்ப்பு தேசியக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிப்பதோடு எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பை வழங்கும் தொழிலாகவும் இருக்கிறது.

குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு

அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்யவேண்டும். நன்கு கழுவி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இது நோய்ப் பரவலின் தன்மையைக் குறைக்கும்.
poultry_hatchery
குஞ்சு பொரிப்பகம்
40 சதவிகிதக் கரைசலில் 40 மிலி ஃபார்மால்டிஹைடு, 20 கிராம் பொட்டாசியம் ஃபர்மாங்கனேட் கரைசல் ஒவ்வொரு 2.8 மீட்டர் 3 இடைவெளிக்கும் அடைக்காப்பான் மற்றும் பொரிப்பகத்தினுள் ஊற்றவேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டை கண்ணாடி அல்லது மண்பாத்திரத்திலும், ஃபார்மலினை அதன் மீதும் ஊற்றிவிடலாம். புகையூட்டுதலை முட்டை வைப்பதற்கு முன் தினம் செய்து அறையைப் பூட்டிவிடவேண்டும். இது வெப்பநிலையை சரியாக நிர்வகிக்க உதவும்.
பொரிப்பகத்தில வேலை செய்பவர்கள் உள்ளே செல்லுமுன் குளித்து உடைகள், காலணிகளை மாற்றிக்கொண்டு செல்லவேண்டும். குஞ்சுகள் விற்பனை செய்யும் போது முறையாக இரசீது வழங்கி உடனுக்குடனே அனுப்பிவிடவேண்டும். மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் சமயங்களில் மின்சாரம் உண்டாக்கும் சாதனம் (ஜெனரேட்டர்) பயன்படுத்தலாம்.

அடைகாக்கப்பட்ட முட்டைகளைச் சோதித்தல்

5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கருவளர்நிலை காணவேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்கப் பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில் தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்து விட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்து கொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்யவேண்டும். கோழியின் வம்வாவழியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும்.

அடைகாத்தல்

வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம். அடைக்காப்பானினுள் வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் (37.2 டிகிரி செ – 37.8 டிகிரி செ) வரை குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும் போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.
ஈரப்பதம் ஒரு முக்கியக் காரணி. உலர்ந்த அல்லது ஈரப்பதமுள்ள வெப்பநிலைமானிக் கொண்டு ஈரப்பதத்தை அளக்கலாம். முட்டைப் பொரிக்க 21 நாட்கள் ஆகும். முதல் 18 நாட்களில் ஈரப்பதம் 60 சதவிகிதமும் பின்பு 3 நாட்களுக்கு 70 சதவிகிதமும் இருந்தால் தான் முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கும். செலுத்தப்பட்ட அடைக்காப்பான் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதம் குறையும்.
கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். கூரிய முனைப்பகுதியை மேலே இருக்குமாறு வைத்தால குஞ்சுகளின் தலைக் குறுகிய முனைப்பகுதியில் உருவாக்குவதால் பொரிக்கும் திறன் குறையும். முட்டையைத் திருப்பி விடுவது பொரிக்கும் திறனை அதிகப்படுத்தும். கைகளால் திருப்பினால் நாளொன்றுக்கு 4 முறை திருப்பவேண்டும். இப்போது நவீன அடைக்காப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முட்டைத்  தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 நாட்களுக்குப் பின் எந்த ஒரு திருப்புதலும் தேவைப்படாது.
poltry_egg_incubator
அடைகாத்தல்
முட்டைப் பொரிக்கும் திறனை அதிகப்படுத்த வெவ்வேறு பொரிப்பான்களைப் பயன்படுத்தலாம். தனித்தனி பொரிப்பான்களைப் பயன்படுத்தும் போது 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரப்பதம் 70-80 சதவீதமும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் பிற முட்டைகளைப் பாதிக்காமல் புகை போடுதல் போன்றவற்றைச் செய்வது எளிது.

முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்

கோழிக்குஞ்சுகளின் உருவாக்கமே அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் எனப்படுகிறது. முந்தைய நாட்களில் தாய்க்கோழியின் அடையில் வைத்தே குஞ்சுகள் பொரிக்கப்பட்டன. தேசிய இனக் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறையில் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறை 10-12 முட்டைகள் மட்டுமே 1 கோழியினால் ஒரு சமயத்தில் அடைக்காக்க முடியும்.
poultry_egg laying
முட்டையிடுதல்
எனவே பெரிய பண்ணை உற்பத்தி முறைகளுக்கும் கடினமானதாக இருக்கிறது. கோழிகளைப் போன்றே சூழ்நிலையை உருவாக்கக்கூடிய அடைகாப்பான்களில் குஞ்சுபொரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.

நீர்

  • 2×2 லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தொட்டியில் 2 வார வயதுடைய 100 குஞ்சுகளுக்கு வைக்கலாம்.
  • 3 வார வயதுடைய குஞ்சுகளுக்கு 2 x5 லிட்டர் அளவு கொண்ட தொட்டிகளில் அளிக்கவேண்டும்.
  • எப்போது புதிய, தூய தண்ணீரை வழங்கவேண்டும்.
  • அடைகாக்கும் தருணங்களில் சரியான கவனிப்பும் நீர் ஆகாரமும் அவசியம். குஞ்சுகளின் இறப்பு எண்ணிக்கை 2 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் அடைகாப்புப் பராமரிப்புகள் முறையாக இருக்கின்றனவா என்றும், இறந்த குஞ்சுகளின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகளையும் வைத்து  இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்தல் வேண்டும்.
  • அடைக்காப்பானில் வெப்பநிலைய வாரத்திற்கு 3 செல்சியஸ் என்ற அளவில் குறைத்துக் கொண்டே வரவேண்டும். அடைக்காப்பானை நீக்கும் போது குஞ்சுகளுக்கு 40 வாட்ஸ் ஒளி விளக்கு என்ற அளவில் வெளிச்சம் வழங்கப்படவேண்டும்.
  • 100 கோழிகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவு மற்றும் நீரின் அளவை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சூத்திரத்தின் மூலம் அறியலாம்.
  • 100 கோழிகளுக்குத் தேவையான தீவனம் கிலோகிராமில் வயது நாட்களில் 14.4
  • நீரின் அளவு லிட்டரில் (100 கோழிகளுக்கான) வயது நாட்களில் 12.0
  • சாதாரண சூழ்நிலையில் மேற்கண்ட சூத்திரத்தின்படி கணக்கிட்டுக் கொள்ளலாம். பருவ நிலை (அ) தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து 5-10 சதம் வரை வேறுபடலாம்.

இறைச்சிக் கோழித் தீவனக்கலவை

சேர்க்கும் பொருட்கள்
சேர்க்கவேண்டிய அளவு
ஆரம்பித்தல் (0-5 வாரங்களில்) முடிவில் (6-7 வாரங்களில்)
மஞ்சள் சோளம் 47.00 54.50
தீட்டப்பட்ட அரிசி 8.00 10.00
சோயாபீன் துகள் 17.50 14.00
கடலைப்புண்ணாக்கு 15.00 11.00
உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன் 10.00 8.00
தாதுக்களின் கலவை 2.00 2.00
உப்பு 0.50 0.50
மொத்தம் 100.00 100.00
இது தவிர வெளியில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலந்து விற்கும் வணிக ரீதியான கலப்புத் தீவனங்களையும் அளிக்கலாம்.

உணவூட்டம்

2 வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.

பண்ணை / கொட்டகை அமைப்பு

ஒரு குஞ்சுக்கு 930 செ.மீ 2 என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற கொட்டகைப் பராமரிப்புகள் முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன.

இறைச்சி / கறிக்கோழி


இறைச்சிக் கோழிகள் என்பவை இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6லிருந்த 8 வாரங்கள் வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

குடற்புழு நீக்கம் செய்தல்

ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.

ராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்

முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரித்தல் மூலம் நோய் வராமல்  தடுக்கலாம். பிற மனிதர்கள் உள்ளே வராமல் தடுத்தால் ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இறந்த கோழிகளின் உடலை உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. அப்போது  தான் அவற்றை உண்ண வரும் காக்கைகள், கழுகு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாக்க முடியும். இருவகைத் தடுப்பூசிகள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று குஞ்சுகளிலும் மற்றொன்று வயதான கோழிகளிலும் போடப்படுகிறது. இத்தடுப்பூசி இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. 6 வார வயதான குஞ்சுகளுக்குப் போடப்படும் தடுப்பூசியானது 1லிருந்து 3 வருடங்கள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும். அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது. முக்தேஸ்வர் என்ற தடுப்பு மருந்து அதிகம் கொடுத்தல் கூடாது. அம்மருந்து உறுப்புக்களைப் பாதித்து சில சமயங்களில் பறவைகளில் பக்கவாதத்தினை ஏற்படுத்துகிறது. இரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.
வயது
நோய் தடுப்பு மருந்து செலுத்தும் வழி
முதல் நாள் மாரெக்ஸ் ஹச்.வீ.டி மருந்து தோலின் கீழ்
5-7 நாட்கள் ராணிக்கெட், எப் தடுப்பூசி / லசோட்டா எப் லசோட்டா எப் கண்ணில் (சொட்டு மருந்து)
10-14 நாட்கள் ஐபிடி உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி குடிதண்ணீர் மூலம்
24-28 நாட்கள் ஐபிடி உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி தடுப்பூசி குடிதண்ணீர் மூலம்
8வது வாரம் இராணிக்கெட் நோய் இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர் டுபி தடுப்பூசி இறக்கையில் தோலின் கீழ்
15-18 நாட்களில் இராணிக்கெட் நோய் உயிருள்ள இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர்டுபி தடுப்பூசி / உயிரற்ற இராணிக்கெட் தடுப்பூசி இறக்கையில் தோலின் கீழ்

கோழிகள்

கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்கவேண்டும். சில நாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு வளர்ந்து ஓடக்கூடிய நிலையில் இருக்கலாம்.

தனிமையில் வளர்த்தல்

வணிக ரீதியில் அளவில் வைப்பதை விடப் பெரிய பண்ணைகளே அதிக லாபம் தரக்கூடியவை, முட்டை உற்பத்திக்கு 2000 பறவைகள் கொண்ட பண்ணை அமைப்பு சிறந்தது. இறைச்சிக்கென வளர்க்கப்படும் கோழிகள் வாரத்திற்கு 250 குஞ்சுகள் புதிதாக சேர்க்கப்படவேண்டும்.

ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை

  • கூளங்கள் அதிக ஈரம்படாமல் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  • குறிப்பிட்ட அளவுக் கோழிகளையே வளர்க்க முடியும்.
  • நல்லக் காற்று வசதி இருக்கவேண்டும்.
  • கூளங்கள் வாரத்திற்கொரு முறை மாற்றப்படவேண்டும். ஏதேனும் ஈரமான கூளங்கள் இருப்பின் அவற்றிற்குப் பதில் புதிய உலர்ந்த கூளங்கள் போடப்படவேண்டும்.
  • ஒரு சரிவிகிதத் தீவனம் கோழிகளுக்குக்  கொடுக்கப்படவேண்டும்.
  • கோடைக்காலத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே கூளங்கள் போடப்பட்டு தயார் செய்யப்படவேண்டும். அப்போது தான் சூட்டில் பாக்டீரியாக்கள் நன்கு செயல்புரிந்து கூளங்கள் தயாராகும்.
  • தண்ணீர் வைக்கும் இடங்களில் நீர்க்கூளத்தின் மீது சிந்தி ஈரமாக்கிவிடாதவாறு எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஆழ்கூள முறை

இம்முறை உலகம் முழுவதம் பின்பற்றப்படும் முறை ஆகும்.
Poultry_Deep litter System


பயன்கள்
  • மூலதனம் குறைவு.
  • சுகாதாரமானது, அதோடு கோழிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
  • இதில் பயன்படுத்தப்படும் கூளமானது ரிஃபோஃபிளேவின் மற்றும் விட்டமின் பி 12 ஆகிய சத்துக்களை கோழிக்கு அளிக்கிறது.
  • நோய்க் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் எளிது.
  • உற்பத்தித் திறனை அதிகப்படுத்துகிறது.
  • நெல் உமி, உலர்ந்த இலைகள், நறுக்கிய வைக்கோல் மற்றும் வேர்க்கடலை தழைகள் போன்ற கிடைக்கும்பொருட்களை கூளமாக உபயோகிப்பதால் இடுபொருள் செலவு குறைவு.

கோழி வளர்ப்பு

பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன. கூண்டு முறை / கொட்டகை முறை ஆழ்கூள முறை
 

தீவனப் பராமரிப்பு

தீவனப் பராமரிப்பு கோழி வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி வளர்ப்புச் செலவின் 60-70 சதவிகிதம் அளவு தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் தீன வீணாகாமல் முழுமையாக கோழிகளால் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரு லாபகரமான பண்ணையை உருவாக்க முடியும். 40க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கோழிகளுக்கு தேவைப்படுகிறது.
இவை கீழ்க்கண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களே ஆற்றலுக்கு பிரதானமானவை. கொழுப்பில் கார்போஹைட்ரேட் விட 2.25 மடங்கு ஆற்றல் அதிகமாக உள்ளது. மேலும் இதில் லினோலெயிக், லினோலெனிக், அராக்கிடியோனிக் அமிலம் போன்ற இன்றியமையாத கொழுப்பு அமிலங்களும் உள்ளன. அமினோ அமிலத் தேவையினைப் பூர்த்தி செய்யப் புரதம் அவசியம் ஆகும்.

இடஅமைப்பு

கோழிப்பண்ணைக்கு இடத்தைத் தேர்ந்தெடுக்கையில் கீழ்வரும் குறிப்புகளைக் கருத்தில் கொள்ளுதல் நலம்.
poultry_housing_002
  • கோழியும், தீவனமும் எளிதில் கிடைக்கக்கூடிய இடத்தில் பண்ணை அமைக்கவேண்டும்.
  • மின்சார வசதி கிடைக்குமாறு இருக்கவேண்டும்.
  • மழைக்காலங்களில் நீர்த் தேங்காமல் விரைவில் வடியக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.
  • குடி தண்ணீர் தாராளமாகக் கிடைக்கவேண்டும்.
  • நல்ல சந்தை சற்று  தொலைவிற்குள் இருக்கவேண்டும். அதாவது சந்தைப்படுத்துதல் எளிதாக இருக்கவேண்டும்.

கோழிக் கொட்டகை அமைத்தல்

நம் நாட்டில் திறந்தவெளிக் கோழி வளர்ப்பே பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் வர்த்தக ரீதியில் நல்ல இலாபம் பெற பண்ணை வீடுகள் அமைக்க வேண்டியதாகிறது. கோழிப் பண்ணை வீடுகள் நல்ல காற்றோட்டத்துடன், கோடைக்காலங்களில் குளிர்ச்சியாகவும், குளிர்க்காலங்களில் வெதுவெதுப்பாகவும் இருக்கவேண்டும். வெப்பம் மிகுந்த நாடுகளில் பக்கங்கள் வடக்கு தெற்காக இருக்குமாறு கொட்டகை அமைக்கவேண்டும். அப்போது தான் சூரிய வெப்பம் கொட்டகைக்குள் விழாமல் தவிர்க்க முடியும். குளிர்ப்பிரதேசங்களில் அதிக சூரிய வெளிச்சத்தைப் பெற தெற்கு, தென்கிழக்காக கொட்டகை அமைத்தல் வேண்டும். அப்போது தான் சரியான காற்றோட்டம் கிடைக்கும். இளம் குஞ்சுகளை கோழிக் கொட்டகையிலிருந்து 45-100 மீ தொலைவில் அமைத்தால் தான் நோய் பரவுவதைக் குறைக்க இயலும். திறந்த வெளிக் கொட்டகை அமைப்பில் அகலம் 9 செ.மீ இருக்க வேண்டும். இடத்தின் வெப்பநிலையைப் பொறுத்து உயரத்தை மாற்றிக் கொள்ளலாம். சாதாரணமாக 2-4-3 மீ உயரம் வரை அமைக்கலாம். வீட்டினுள் வெப்பத்தைக் குறைக்க உயரத்தை அதிகப்படுத்தவேண்டும்.
poultry_housing
கோழிக் கொட்டகை
தேவையான வசதிகளுடன் பாதுகாப்பானதாகவும், நீண்ட நாள் தாங்கக் கூடியதாகவும் கோழிப்பண்ணை வீடுகள் இருக்கவேண்டும். தரை ஈரத்தைத் தாங்கக் கூடியதாக, எந்த வெடிப்பும், ஓட்டையோ இன்றி சுத்தம் செய்ய எளிதாக இருக்கவேண்டும். கூள தரை, சிலேட் தரை, சிலேட் – கூள தரை, கம்பி மற்றும் கூளத்தரை உண்டு. சுற்றுச் சுவர்கள் கூரையைத் தாங்கக் கூடியதாகவும், காற்றிலிருந்து கோழிகளைப் பாதுகாப்பதாகவும் இருத்தல் வேண்டும். கூரை அதிக பாரமின்றி ஈரத்தை எளிதில் உலர்த்துவதாக அமைக்கவேண்டும். கூரைகளில் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க அலுமினியம் பெயின்ட் (வண்ணப்பூச்சு கொண்டு பூசுதல் நன்மை பயக்கும். அதே போல் கூரை இருபுறமும் கீழே இறங்கியவாறு அமைத்தால் மழை நீர் தெரிப்பது குறையும். பக்கங்கள் இரண்டில் 1 பங்கு அல்லது 3ல் 2 பங்கு திறந்த வெளியாக அமைக்கலாம். அடை காக்கும் கொட்டிலில் உயரத்தின் பாதி அளவு பக்கங்கள் திறந்ததாகவும், இறைச்சி மற்றும் முட்டைக் கோழிகளில் 3ல் 2 பகுதி திறந்தவெளியாகவும் இருத்தல் அவசியம். மேலும் இந்தக் கொட்டகை அமைப்பானது நல்ல நீர்த்தேக்கமற்ற, வெள்ள பாதிப்பு ஏதுமின்றி எளிதில் சாலையை அடையுமாறு இடத்தில் இருப்பது சிறந்ததாகும்.

கொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை

பொருட்கள்
கலவை 1 (சதவிகிதம்) கலவை 11 (சதவிகிதம்)
கடலைப்புண்ணாக்கு 52 60
எள்ளுப் புண்ணாக்கு 20 -
உப்பின்றி உலர்த்திய மீன் (கருவாடு) 20 32
அரிசி / கோதுமை / மரவள்ளிக்கிழங்கு குருணை 4 4
கோழிகளுக்கான தாதுக்கள் 4 4
மொத்தம் 100 100

கொல்லைப்புற கோழி வளர்ப்பு


எல்லாக்  கோழிப் பண்ணைகளுக்கும் இந்தியாவின் கொல்லைப்புற கோழி வளர்ப்பே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இது கொல்லைப்புற முறையில கலிங்கா ப்ரெளன், மும்பை தேசி, ரோட் ஐலேன் ரெட், காரி நிர்பீக் போன்ற இனங்களைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புற வளர்ப்பு முறையில் பல வகை உண்டு. இடவசதி போதுமானதாக இருந்தாலும், தீவனப் பராமரிப்பு முறையாக இருப்பதில்லை. மேலும் அதிக உற்பத்தித் திறனுக்கு அயல் நாட்டு இரகங்களை உள்ளூர் இனங்களுடன் கலந்து விடலாம். கீழ்க்கண்ட வழிமுறைகளைப்  பின்பற்றுவதன் மூலம் கொல்லைப்புறத்தில் கோழிகளை சிறந்த முறையில் வளர்க்கலாம்.
Backyard Poultry
  • அயல்நாட்டு இனங்களை கொல்லைப்புறத்தில் நம்நாட்டு இனங்களுடன் கலந்து விடலாம்.
  • கிராமலட்சுமி, கிராமப்பிரியா போன்ற கலப்பினங்களை வளர்க்கலாம்.
  • இரவுக் கோழிகள் அடையும் இடத்தில் சரியான காற்றோட்டம் இருக்கும்படி அமைத்தல்.
  • சரியான நேரத்தில் குடற்புழு நீக்க மருந்து மற்றும் தடுப்பூசிகளை அளித்தல்.
  • கழிவுகளை மட்டுமே தீவனமாகத் தின்னக் கொடுக்காமல் சிறிது சிரிவிகித கலப்புத் தீவனமும் வழங்குதல் அவசியம்.
  • ஒரு சரியான அளவில் தயாரிக்கப்பட்ட கலவையை கொல்லைப்புற கோழிகளுக்கு 50 சதவிகிதம் அளவு கொடுத்தால் நல்ல முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி இருக்கும்.


கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு கோழிகளை பல்வேறு தேவைகள் கருதி வளர்க்கும் தொழிற்துறையாகும். கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கும் தற்காலத்தில் அதிகரித்துச் செல்கிறது. சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. பாரிய பண்ணை முறை கோழிவளர்ப்பானது பறவைக் காய்ச்சல் நோய்க் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.


வரலாறு

 

 இந்தியா, மியன்மார், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (Gallus gallus) இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.[1] சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.[2] இக்கோழிவளர்ப்பு பின்னர் ஏனையப் பகுதிகளுக்கும் பரவியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

வளர்ப்பு முறைகள்

 கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் (கட்டற்ற கோழி வளர்ப்பு) வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது.

கட்டற்ற கோழி வளர்ப்பு

இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழிவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே ஆரம்பத்தில் செய்யப்பட்ட கோழிவளர்ப்பு முறையுமாகும். இம்முறையின் கீழ் கோழிகளின் நடமாட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். இம்முறையின் கீழ் செயற்கை வேதியல் பொருட்களின் பயன்பாடு குறைவாக அல்லது பூச்சியமாக காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன. இம்முறையின் கீழ் கோழிகள் சுதந்திரமாக நடமாட மற்றும் தமது இயற்கை வாழ்க்கை முறைக்கு ஒத்த வாழ்வை வாழக்கூடியன ஆகையால் விலங்கு உரிமை ஆர்வளர்கள் இம்முறையை ஆதரிக்கின்றனர்.

பண்ணை முறைக் கோழி வளர்ப்பு

இம்முறையின் கீழ் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற ஈரப்பதனை உரியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகளுக்கான உணவு, நீர் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுக்கும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும். இது செலவு குறைவான முறை ஆனால் முட்டை உற்பத்தி கூண்டு முறையை விட குறைவாக இருக்கும். தீவனம் மிகுதியாக வீணாகும். அதிக இடம் தேவை.


கூண்டு முறை (Battery Hen)


இம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும்.[3] கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து மரணம் அடையும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.[4]
கூண்டுடைய கோழிப் பண்ணை
ஒரு குறிப்பிட்ட பண்ணைப் பரப்பில் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை வளர்க்களாம் என்பதால் முட்டை உற்பத்தி மிகுதியாகக் காணப்படும். இம்ம்றையின் கீழ் கூண்டு இல்லா முறையை விட 2 தொடக்கம் 4 மடங்கு அதிகமான எண்ணிகையான கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் முட்டையிட்டவுடன் தானகவே கூண்டைவிட்டு வெளியேறும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் முட்டைகள் சேதமாவது குறைவாக காணப்படும்.
இம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் இருப்பதால் சிறகுகளை இழக்கும். மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம்.[3] பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான புரதத்தை பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் ஈரல்களில் அதிகளவான கொழுப்பு சேமிக்கப்படுகிறது.[3] இவ்வாறான கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன.[5]
2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம், கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது அங்கத்திய நாடுகளில் தடைச் செய்துள்ளது.[6] ஆஸ்திரியா 2004 ஆம் ஆண்டு முதல் கூண்டு கோழி வளர்ப்பு முறையைத் தடைச் செய்துள்ளது.[7]

வளர்க்கப்படும் இடங்கள்

கோழி வளர்ப்பில் முதல் இடத்தில் ஐக்கிய அமெரிக்காவும் , 2ம் இடத்தில் சீனாவும், 3ம் இடத்தில் பிரேசிலும், 4ம் இடத்தில் மெக்சிகோவும், 5ம் இடத்தில் இந்தியாவும், 6ம் இடத்தில் பிரித்தானியாவும், 7ம் இடத்தில் தாய்லாந்தும் உள்ளன.

இந்தியாவின் கோழி வளர்ப்புத்துறை

 

இந்தியாவில் இருந்து பெருமளவிலான கோழிகள் இலங்கைக்கும் (50%), வங்காள தேசத்திற்கும் (32.5%), நேபாளத்திற்கும் (8.2%) ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் இருந்து பெருமளவிலான முட்டைகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் குவைத்துக்கும் ஓமனுக்கும் ஏற்றுமதியாகின்றன. முட்டை தூளானது ஜப்பானுக்கும் போலந்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன.
தமிழகத்தின் நாமக்கல் மண்டலம் கோழி வளர்ப்பில் முதன்மையானது.


Regards,

Manivannan P

7373361387

Chellakuttiyur

Vedasanthur taluk

Kovilur Post

Dindigul District